Monday 6th of May 2024 08:31:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாடு: ஒரே நாளில் 195 பேரை பலியெடுத்த கொரோனாவுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்பு!

தமிழ்நாடு: ஒரே நாளில் 195 பேரை பலியெடுத்த கொரோனாவுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்த நிலையில் 25 ஆயிரத்தை அண்மித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

நேற்று (மே-06) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 24 ஆயிரத்து 898 ஆக பதிவாகியதன் மூலம் முதல் முறையாக 24 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் உயிரிழப்பு 5 ஆயிரத்தை கடந்தது!

அதிகபட்சமாக சென்னையில் நான்காவது நாளாக 6 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 6 ஆயிரத்து 678 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 69 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரத்து 596 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 21 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE